| துன்பமிக்க அடிமைவாழ்வில் தோய்ந்திருந்த என்மனம் சோகம்விட்டு விடுதலைக்கு மோகமுற்றி விட்டதே. | |
முருகன்மேற் காதல் |
| முருகனென்று சொன்னால் தோழீ! உருகு தென்றனுளம் என்னே! பெருகி நீர்விழிகள் சோர-மனம் பித்துகொள்ளுது உள்ளூர | (முரு) |
| கந்தனென்று சொலும் முன்னே-என் சிந்தை துள்ளுவது என்னே! உந்தும் பேச்சுரைகள் உளறி-வாய் ஊமை யாகுதுளம் குளிர | (முரு) |
| வேலனென்ற பெயர் கேட்டு-ஏனோ வேர்வை கொட்டுதுதன் பாட்டில் காலமென்ற பயம் ஓடி-புது களி சிறக்குதடி சேடி. | (முரு) |
| குமரனென்ற ஒரு சத்தம்-கேட்டு குளிர வந்ததடி சித்தம் அமர வாழ்வுபெறல் ஆனேன்-இனி அடிமை யார்க்குமிலை நானே. | (முரு) |
| குகனெனச் சொல்வதற் குள்ளே-நான் அகம் மறந்தேன் அது கள்ளோ! தகதகவென் றொரு காட்சி - உடனே தண்ணெனமுன் வரல் ஆச்சு, | (முரு) |