| ஆடும் மயிலில் வரக்கண்டேன்-சொல்ல அழகு அதைவிட ஒன்றுண்டோ வீடு வாசல் பொருள் எல்லாம்-துச்சம் விட்டு மறந்த னடி நல்லாள் | (முரு) |
| பச்சைக் குழந்தையவன் மேலே-என்றன் பற்று மிகுந்த தெதனாலே? இச்சை யாரமிகத் தழுவி-நானும் இணங்கி யிருந்தனனின்பம் முழுகி | (முரு) |
| கள்ளங் கபடமற்ற பாலன்-மேலே காதல் கொண்ட என்னை ஞாலம் எள்ளி ஏளனஞ் செய்தாலும் - நான் எதற்கும் அஞ்சிலன் எக்காலும் | (முரு) |
| முருகன் கந்தன் வடிவேலன்-ஞான திருமுருகன் குமரன் சீலன் சிறு குழந்தை யானாலும்-அவனைத் திருமணம் புரிவன் மேலும் | (முரு) |
| வேறு பெயரைச் சொன்னாலும்-சற்றும் விரும்ப மாட்டேனெந்த நாளும் தூறு பேசுவதை விட்டு எனக்குத் துணைபுரி முருகனைக் கட்ட | (முரு) |