பக்கம் எண் :

தமிழன் இதயம்17

  
கடவுளை அறிந்தவர்கள்
 

பல்லவி

  அவரே கடவுளை அறிந்தவராவர்
அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர்.


(அவ)
 

சரணம்

  துன்பப்படுவோர் துயரம் சகியார்
துடிதுடித்தோடித் துணைசெயப் புகுவார்
இன்பம் தமக்கென எதையும் வேண்டார்
யாவரும் சுகப்படச் சேவைகள் பூண்டார்.
 
(அவ)
 
  பசியால்வாடின எவரையும் பார்த்து
பட்டினி தமக்கெனப் பரிதபித்தார்த்து
விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார்
வீண்உபசாரம் விளம்புதல் விடுப்பார்.
 
(அவ)
 
  நோயால் வருந்திடும் யாரையும் கண்டு
நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும்
தாயாம் எனவே தம்சுகம் எதையும்
தள்ளிவைத் தருகினில் தாமிருந் துதவும்.
 
(அவ)
 
பெரியோர்
 
  மடங்கிய பயிர்க ளெல்லாம்
     மழைவர நிமிர்ந்து நீளும்
மருண்டிடும் குழந்தை பெற்ற
     மாதினைக் கண்டு தேறும்