காங்கிரஸ் பொன்விழா | கும்மி | | தேரல்ல கார்த்திகைத் தீபமல்ல-அந்தத் தீபாவளியும் இன்றல்லவே ஊரெல்லாம் என்ன வெளிச்சமென்பீர் இந்த ஒப்பற்ற கொண்டாட்டம் ஏதுக்கென்பீர். காங்கிரஸ் என்றொரு சங்கமுண்டு-அது காதிற்படாதவர் யாருமில்லை ஈங்கதற் கைம்பது ஆண்டுகள் ஆனதில் இந்திய மக்களின் கொண்டாட்டம். தங்கி இருக்க இடங்கொடுத் தோம்-அதைத் தங்கள் இடமெனச் செய்துகொண்டார் இங்கிருந் தேயவர் மெல்ல மெல்ல இந்த இந்திய நாட்டை அடிமை கொண்டார். அந்த அடிமைத் தனம்போக நம் அன்னையும் ஆட்சியும் மீட்சிபெற இந்தத் தினம்வரை இந்தியர் மானத்தை ஏந்தி உழைப்பது காங்கிரசே. கெஞ்சிக் கெஞ்சிப்பல நாள்கேட்டும்-அதைக் கேட்பவர் யாரும் இல்லாததனால் அஞ்சிக்கை யாவையும் விட்டொழிய நமக்கு ஆண்மை கொடுத்தது காங்கிரசே. சத்தியம் என்ற கொடிபிடித்து-உயர் சாந்தத் தியாகப் படைதொடுத்து உத்தமர் காந்தி உரைப்படி காங்கிரஸ் உலகம் வியந்திடும் போர் நடத்தி. | | |
|
|