பக்கம் எண் :

132நாமக்கல் கவிஞர்

  
  வேந்தர்கள் வரிப்பணம் வாங்குவதும்  
   வீரர்கள் வெற்றிகள் தாங்குவதும்
மாந்தர்கள் செய்யும் எத்தொழிலும்
   மண்ணிற் சிறப்பது கைத்தொழிலால் (கை)
  
  எந்திர வேலைகள் சிறந்திடவும்  
   ஏற்றவன் கைத்தொழில் தெரிந்தவனே
மந்திரத் தால்எதும் வந்திடுமோ
   மனிதன் செய்தது எந்திரமும் (கை)
 
  வேலையில் லாதவர் திண்டாட்டம்  
   விளைந்திடும் கலகக் கொண்டாட்டம்
ஆலைகள் எந்திரச் சாலைகளால்
   அதிகப் படுவதை அறிவோமே (கை)
 
  கைத்தொழில் காத்திடும் ஒருநாடே  
   கலகம் குறைந்துள திருநாடாம்
எத்தனைக் கெத்தனை எந்திரமோ
   அத்தனைக் கத்தனை தொந்தரவே (கை)
 
  கைத்தொழில் தம்மைக் காத்திடுவோம்
   கலகம் பற்பல தீர்த்திடுவோம்
பொய்த்தொழில் யாவும் குறைந்திடவே
   பூமியில் நாமே சிறந்திடுவோம்
 
(கை)
  
  ஏழை செல்வன் என்றுவரும்
   எல்லாப் பிணக்கும் நின்றுவிடும்
வாழிய வாழிய கைத்தொழில்கள்
   வாழிய நித்திய சத்தியமும்
 
(கை)