| கஷ்டமாகிய வேலையொன்றையும் கட்டி நீசெயல் விட்டிடு நுட்பமாகிய உன்றன் மேனியும் நொந்திடில் துயர் தந்திடும் நீளுமாமலர்த் தாழையோடு நிறைந்த மாமரச் சண்பகம் சூழும்நல்ல மண மிகுந்தவை சுந்தரிக்கிவை சூட்டுவோம் வாழுமந்த வனமுழுவதும் வாடையோடிஉ லாவல்போல் நாளும்நீ உன்றன் வீட்டிலெங்கும் நடந்துலாவுதல் வேண்டியே சேற்றில்நின்று வளர்ந்து நீரினிற் சேர்ந்திருப்பினும் தாமரை சாற்றுமோரள வுக்கு மீறிடத் தானருந்துமோ நீரினை சேற்றின் மூழ்கி இருந்தபோ திலும் சொற்பமாகவே சுத்தமாய்ப் போற்றியுண்ணுதல் வேண்டுமென்றந்தப் பூமுடிந்தனள் பூவையே. | | |
|
|