பக்கம் எண் :

26நாமக்கல் கவிஞர்

  
  வேதங்கள் தேடுவதும் கீதங்கள் பாடுவதும்
வேள்வி முயன்றதுவும் கேள்வி பயின்றதுவும்
காதம் பல நடக்கும் காவடி யாத்திரையும்
கற்றவர் மற்றவரும் முற்றும் விரும்புகின்ற
 
(சாந்தி)
 
  முந்திநம் முன்னவர்கள் நொந்து தவம்புரிந்து
முற்றும் அறங்களினால் பெற்ற பெரும்பயனாம்
இந்திய நாட்டினுக்கே சொந்தப் பெருமை என்று
எந்தெந்த நாட்டவரும் வந்து பயிற்சி பெறும்
 
(சாந்தி)
 
காந்தியடிகளின் பெருமை
 
  இந்திய நாடு சுதந்தர மெய்தநல்
தந்திரம் தந்தது யார்?-சிறு
கந்தை  ‘பக்கீ’ ரென்று தந்தொருவன் சொன்ன
காந்தி யென்னும் பெரியார்.

அஞ்சிக் கிடந்தநம் நெஞ்சந் துணிந்திட
ஆண்மை எழுப்பினதார்?-ஒரு
வஞ்ச மில்லாதவர் வாய்மையின் தூய்மையின்
வாழக்கையர் காந்தியவர்.

ஆயுதம் இன்றியும் யாரும் வணங்கிடும்
அன்பைப் பெருக்கினதார்?-சற்றும்
சாயுதல் செய்திடாச் சத்தியமூர்த்தி நம்
தவமுனி காந்தியவர்.

நாட்டினிக் காயுயிர் கேட்பினும் தந்திட
நானென்று முன்வருவோர்-பலர்
போட்டியிட்டே வர வீரம் புகுத்தினர்
புண்ணியர் காந்தியவர்.