| அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும் அச்சமகற்றினதார்? -உண்மை குடிகொண்ட கோபத்தைக் குறைவற நீக்கிய குணமுயர் காந்தியவர். பேதையரென்று நாம் பேசிய பெண்களும் வீதியில் நம்மிலுமே -இந்த நீதியில்லா முறை அரசை எதிர்த்துடன் நின்றிடக் காந்தி செய்தார். சின்னஞ்சிறிய குழந்தைகளும் இன்று ஜயஜய வென்றுசொல்லி -எங்கும் கல்நெஞ்சுருகிடத் தேசத்தினைத்தொழ காந்திஜி செய்துவிட்டார். தீண்டப்படாதென்று மனிதரைச் சொல்வது தீமையில் தீமையென்றே -அதைப் பூண்டொடும் போக்கநாம் விரதம்புனைந்தது புண்ணியர் காந்தியினால். தன்னை வதைப்பவர் தங்களுக்கும் அன்பைத் தாங்குவதே தவமாம் -என்று முன்னை இந்நாட்டினில் சொன்னவர் சொற்களை முற்று வித்தார் காந்தி. உடலினும் உயிரினும் உள்ளிருக்கும் ஒன்று உயர்ந்தது காணும் என்றே -இந்தக் கடலுலகத்தினில் கண்ணுக்கு முன்னாக காட்டிவிட்டார் காந்தி. காந்தியெனும் பெயர் சாந்தம் என்னும் சொல்லின் காட்சியின் சாட்சியென்றே -இனி மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி மங்களம் எய்திடுவார். | | |
|
|