பக்கம் எண் :

தமிழன் இதயம்41

  
  கருமமது செய்தல் வேண்டும்
     கலங்காது உழைத்தல் வேண்டும்
கண்ணபிரான் கீதையிலே
     சொன்னமொழி கடைப்பி டித்த
பெருமை யுள்ள திலகரை நீ
     பிரித்தாயே எம்மை விட்டு
பெம்மானே ஒருவரம் நீ
     பிழையாது தருதல் வேண்டும்;
தருமமது குறையும் போதும்
     தப்பிதங்கள் நிறையும் போதும்
தப்பாம லவத ரிப்பேன்
     தரணியில் நா னென்றபடி
அருமறைகள் அறிய மாட்டா
     அரும்பொருளே வருதல் வேண்டும்.
அன்புடன் நீ அப்போதும்
     திலகருரு அடைதல் வேண்டும்.
 
 
தாதாபாய் நவரோஜி
 
  நேற்றுதித்த தேசமெல்லாம் நினைத்தபடி பலபேசி
          நிந்தைகூறி
     நின்றிடவே குன்றிடநாம் நெஞ்சுருகிப் பஞ்சையராய்
          நித்தமேங்க
வேற்றரசர் நேசரெல்லாம் வேடிக்கை பார்த்தவராய்
          விந்தைபேச
     வெட்கமதால் தலைகுனிந்து வெருண்டுமன மருண்ட எமை
          வெருளேலென்றும்

ஆற்றலுள்ள முன்னோர்கள் அவர்வழியில் பிறந்தநமக்
          கவுதியுண்டோ
     அடைந்திடுவோம் சுயராஜ்யம் அஞ்சாதீர் எனமொழிந்து
          அன்பினாலே