| காடும்மலையும் அதில் கலைவீசும்; கடலும் ஞானம்தர அலைவீசும்; பாடும் தேசிகவி நாயகத்தின் பழமை பாடிடஎன் நாஉவக்கும், நோய்நொடி யாவையும் விட்டோடி நூறு வயதும்சுகக் கட்டோடு தாய்மொழி வளர்த்தவன் கவிகாணும் தனிவரம் தெய்வம் தரவேணும். | |
வ. உ. சிதம்பரம் பிள்ளை |
| சிதம்பரம் பிள்ளையென்றுபெயர் சொன்னால்-அங்கே சுதந்தர தீரம் நிற்கும் கண்முன்னால் விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும்-நாட்டின் விடுதலைக் கேயுழைக்கத் திடந்தருமே. | (சிதம்) |
| அடிமை விலங்கையெல்லாம் அறுத்தெறியும்-நல்ல ஆற்றல் கொடுக்கும் அவன் சரித்திரமே கொடுமை பலசகிக்கும் குணம்வருமே-நாம் கோரும் சுதந்தரத்தை மணந்திடுவோம | (சிதம்) |
| திலக மகரிஷியின் கதைபாடும்-போது சிதம்பரம் பிள்ளைவந்து சுதிபோடும் வலது புயமெனவே அவர்க்குதவி-மிக்க வாழ்த்துக் குரிமைபெற்றான் பெரும்பதவி. | (சிதம்) |
| திருக்குறள் படித்திட, ஆசைவரின்-புதுச் சிதம்பரம் பிள்ளைஉரை பேசவரும் தருக்கிடத் தக்கபெரும் தமிழ்ப்புலமை-கற்றார் தலைவணங்கிப் புகழும் தனிநிலைமை. | |