| வெள்ளையன்றி வேறு நிறம் அறியா ஆடை வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும் கொள்ளை கொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும் குலவுபிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்தல். | | சுப்ரமண்ய பாரதி | | சுப்ரமண்ய பாரதியை நினைத்திட்டாலும் சுதந்தரத்தின் ஆவேசம் சுறுக்கென் றேறும்; இப்ரபஞ்சம் முழுவதும் நமக்கினமாய் எண்ணும்; ‘இந்தியன் நான்’ என்றிடும்நல் லிறுமாப் புண்டாம்; எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும்; எல்லையற்ற உற்சாகம்எழுந்து பொங்கும் ஒப்பரிய ‘தமிழன்’ என்ற உவகை ஊறும்; உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்கமுண்டாம், அச்சமென்னும் பெரும்பேயை அடித்துப் போக்கும், அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும் துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச் சுதந்தரத்தை விட்டுவிடாத் துணிவு தோன்றும்; கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம் கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும் மெச்சிடுநம் தாய்நாட்டின் நாகரீகம் மேன்மையெல்லாம் பாரதியார் பாட்டால்மேவும். தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத் தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும் சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத் தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணி | | |
|
|