| இச்சைபோல் இருந்து வாழ ஈப்புழு எறும்பும் கோரும் உச்சமாம் மனித ஜென்மம் சுதந்தர உணர்ச்சி யின்றி நச்செனும் அடிமை வாழ்வை நயந்திட ஞாய முண்டோ? நிச்சய சபதம் பூண்டு சுதந்தரம் நிலைக்கச் செய்வோம். | |
| உலகினுக் கறிவு தந்து உண்மைகள் மிகுந்து ஞானக் கலைகளைக் கணித்துஜீவக் கருணைசேர் நமது நாடு பலபலக் கொடுமை முற்றிப் பதைத்திடும் பிறநாட் டார்க்கு நலமெடுத் துரைக்க வேனும் சுதந்தரம் நமக்கு வேண்டும். | |
சுதந்தரம் யாது? |
| அச்சம் விட்டது சுதந்தரம் அன்பு விடாதது சுதந்தரம் இச்சைப் படிசெயல் சுதந்தரம் இடர்செய் யாதது சுதந்தரம் பிச்சை கொள்ள விரும்பாது பிறருக் கீய வருந்தாது கொச்சை மொழிகளைச் சொல்லாது கோணல் வழிகளிற் செல்லாது. | |