பக்கம் எண் :

64நாமக்கல் கவிஞர்

  
  ஊழிய னாகப் பணிசெய்யும்
     உலகுக் கெல்லாம் அணிசெய்யும்
வாழிய மக்கள் எல்லோரும்
     வாழிய வென்றே அதுகோரும்.
 

சுகவாழ்வு
 
  சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ?-
வெறும்சோற்றுக் குயிர் சுமந்(து) இறப்பேனோ!
(சுத)
 
விடுதலை யடையாமல் விடுவேனோ?-என்னை
விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ!
(சுத)
 
மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ?-அன்றி
மற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ!
(சுத)
 

தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ?-இன்றித்
தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ-
(சுத)
 
பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ?-விட்டுப்
பாவங்களுக் கொதுங்கிப் பிழைப்பேனோ!
(சுத)
 
ஞான சுதந்தரத்தை அடைவேனோ?-இந்த
ஊனுக்குழைத் தடிமை தொடர்வேனோ!
(சுத)

இச்சா சுதந்தரம்
 
  இச்சை கொண்ட நிமிஷமே
     நிச்சயம் சுதந்தரம்;
பிச்சை கேட்க வேண்டுமோ
     பிறர் கொடுக்க வல்லதோ?