| சுதந்தரம் இல்லா ஒரு நாடு சூழ்புலி பேய் மிகும் பெருங்காடு எதிர்ந்திடும் துயர்களைச் சகித்திடுவோம் எம்முடைச் சுதந்தரம் வகித்திடுவோம். | (சுத) |
| பொது ஜனநாயக முறைகாணும் பூரண சுதந்தரம் பெறவேணும் எதுதடை நேரினும் அஞ்சாமல் எவரையும் அதற்கினிக் கெஞ்சாமல். | (சுத) |
சுதந்தரச் சபதம் |
| அவரவர் உழைப்பின் பலன்களை முழுதும் அவரவர் உரிமையால் அடைந்து சுவையுள வாழ்க்கைக் கவசிய மான பொருளெலாம் சுலபமாய்க் கிடைத்துப் புவியினில் எல்லா வசதியும் பெற்றுப் பூரண வளர்ச்சியில் பொலிதல் எவரொரு பேர்க்கும் மறுக்கொணா உரிமை இந்தியர் எமக்குமாம் இதுவே. | |
| இயற்கையா மிந்த உரிமையைப் பறிக்க இடையிலே தடையென நின்று செயற்கையா லடக்கிக் கொடுமைகள் புரியும் தீமைசேர் அரசியல் என்பதையும் முயற்சியால் திருத்த முடியாது போனால் முற்றிலும் அதனையே நீக்கி அயர்ச்சியில் லாத வேறொரு அரசை அமைப்பதும் குடிகளின் உரிமை. | |