பக்கம் எண் :

74நாமக்கல் கவிஞர்

  
  ஓகையால் வாங்கிப் பிறரையும் அதற்கே
உதவிடத் தூண்டுவோம் உண்மை;
சாகுமோ என்னும் கைத்தொழில் எல்லாம்
தழைத்துயிர் பெற்றிடச் செய்வோம்.
 
 
காங்கிரஸ் கொள்கைக் கட்டளை தம்மைக்
     கடமையிற் பணிவுடன் காப்போம்;
ஓங்கிடும் போது சத்தியப் போரில்
     உவப்புடன் கலந்துகொள் வதற்கே
ஆங்கது கூவி அழைத்ததும் உதவ
     ஆயத்த மாகவே இருப்போம்;
ஈங்கிது எங்கள் சத்தியம் சபதம்
     இந்தியா சுதந்தரம் பெறவாம்.
 

சுதந்தரத் திருநாள்
 
  இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள்
இன்பம் யாவையும் இனிமேல் தருநாள்
செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித்
தெய்வம் தொழுவோம் யாவரும் கூடி
 
 
அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம்;
 ‘அடிமை’ என்னும் சொல்லையும் அழித்தோம்;
பொன்னையும் சுகத்தையும் செலவழித்தேனும்
பூரண சுதந்தரம் அடைந்திட வேணும்.
 
 
அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும்
அன்னை பாரதத் தாய்மனம் குளிரும்
துன்பம் யாவையும் தொலைத்திட முடியும்
சோற்றுத் தரித்திர மாவது விடியும்.