பக்கம் எண் :

தமிழன் இதயம்75

  
  முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில்
முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில்
மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம்
மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம்.
 
 
  எல்லாத் தேகமும் எமக்கினி உறவாம்;
எவரும் செய்திடும் நன்றியை மறவோம்;
நல்லார் யாரையும் நலமுறக் காப்போம்;
நலிப்பவர் யாவரும் நடுங்கிடப் பார்ப்போம்.
 
 
சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே
சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும்
பதந்தரும் பலந்தரும் பரமனைக் காணும்
பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும்.
 

சும்மா கிடைக்குமோ?
 

பல்லவி

  சும்மா கிடைக்குமோ சுதந்தர சுகமது-மனமே!  


அனுபல்லவி

  சுத்தமும் பக்தியும் சத்தியம் இல்லாமல்
சூரமும் வீரமும் சொல்லுவ தால்மட்டும்
(சும்மா)


சரணங்கள்

  உழுது பயிரிடாமல் உணவுகள் கிடைக்குமோ?
உழைப்பும் களைப்புமின்றி உரிமைகள் அடுக்குமோ?
அழுது அழுதுருகி அன்பின் கண்ணீர்பெருக
ஆர்வத்தால் அனைவர்க்கும் சேவைகள் செய்யாமல்
(சும்மா)