பக்கம் எண் :

தமிழன் இதயம்77

  
  ஒடுக்கும் தரித்திரத்தால்
உள்ளவர் முன்னிருந்து
நடுக்கும் குளிர்ப் பயமும்
நாட்டினில் இச்சைப்படி
 
உடலும்குறுகிநின்று
உளறும் எளியரைப்போல்
நம்மை விட்டகன்றிடும்
நாம்குடித்தனம் செய்வோம்
(சுதந்)
 
  உரிமை சிறிதுமின்றி
உழைப்பின்றிச் சுகித்திடும்
திரியும் திருடர்பயம்
தீனரும் அச்சம் விட்டு
ஊரைப் பறித்து உண்டு
ஊனரைப் போல் இருட்டில்
தீர்ந்திடும் நேரம் இனி
ஆனசு கங்கள் பெறும்
(சுதந்)

நல்ல சமயம்
 


பல்லவி

  நல்லசமயமடா-இதை நழுவவிடுவாயோ!
 
 

அனுபல்லவி
 

  நாட்டிற் சுதந்திரம் நாட்டிமனி தருள்
தீட்டுந் தீண்டாமையும் தீர்த்து விடுதற்கு
 
(நல்ல)
 

சரணங்கள்

 
காந்தியைப் போல் தலைவர்-எந்தக்-காலத்திற் கிட்டுமடா
வாய்ந்த தருணமிதை-நீ-வழுவியி ழப்பாயோ
சூழ்ந்திடும் துன்பங்கள்-வீழ்ந்திட நாமினி
வாழ்ந்திடவும் மனச்-சாந்தியடையவும்
(நல்ல)