| வேதம் ஒலிக்குதடா-காந்தி-ஓதும்மொழிகளிலே கீதை ஜொலிக்குதடா-அவர்-செய்யும் கிரியையெல்லாம் வேற்று யில்லாமல்-நாட்டின் நலத்தினைப் போற்றின யாரையும்-கூட்டி உழைத்திட | (நல்ல) |
| பண்டைய காலந்தொட்டு-நம்முள்-பாசம்பிடித்த பல வண்டை வழக்கங்களை-இனி-வாரியெறிந்துவிட்டு பக்தி வளர்த்தினிச்-சுத்த வழிகளில் நத்தி அனைவரும்-ஒத்துச் சுகித்திட (நல்ல) | |
உலகப் போக்கு |
| உலகப்போக்கைப் பாருங்கள் ஊரைக் காக்கச் சேருங்கள் கலகப் பேய் புகுந்திடும் கவலையே மிகுந்திடும் | (உலக) |
| அடிமை வாழ்வு விட்டு நாம் ஆண்மை வாழ்வு கிட்டினோம் கடமை யோடு எல்லையைக் காக்க வேண்டும் அல்லவோ? | (உலக) |
| நாடு முற்றும் நம்மது நன்மை தீமை நம்மது வீடு பெண்டு மக்களை வேறு காக்கத் திக்கு யார்? | (உலக) |
| படை எடுக்கும் யாரையும் பயமுறுத்து வோரையும் நடு நடுங்கச் செய்குவோம் நாட்டை மீட்டு உய்குவோம் | (உலக) |