| சாந்த வாழ்வை மிஞ்சிடோம் சாவதற்கும் அஞ்சிடோம் மாந்தருக்குள் பீதியை மாற்ற வேண்டும் நீதியால் | (உலக) |
| சண்டையென்று அஞ்சினும் சரணம் என்று கெஞ்சினும் மண்டை உள்ள மட்டிலும் மரணம் நம்மை விட்டதோ | (உலக) |
| ஏழை என்ற போதினும் என்ன துன்பம் மோதினும் கோழை என்று வாழ்ந்திடோம் கொடியருக்குத் தாழ்ந்திடோம் | (உலக) |
| ஊர்கள் தோறும் கூடுவோம் ஒற்றுமை கொண்டாடுவோம் சீர் குலைக்க எண்ணுவோர் சிந்தை நோகப் பண்ணுவோம் | (உலக) |
| வீதிதோறும் காவலாய் வீடு தோறும் ஏவலாய் சாதி பேதம் தள்ளுவோம் சமரசத்தைக் கொள்ளுவோம் | (உலக) |
| அன்னியர்க் கிடங்கொடோம் அரசை யார்க்கும் இனி விடோம் மன்ன ராகி ஆளுவோம் மாநிலத்தில் வாழுவோம். | (உலக) |