சத்திய விரதம் |
| சத்திய விரதம் சாதிப்போம் சமரச வாழ்க்கை போதிப்போம் உத்தம சேவை இதுவாகும் உலகத் துக்கே பொதுவாகும். | |
| அன்பின் பெருமையை எடுத்துரைப்போம் ஆயுதக் கொடுமையைத் தடுத்துரைப்போம் துன்பம் யாவையும் சகித்திடுவோம் தூய நன் நடத்தைகள் வகித்திடுவோம் | |
| பொய்யும் இம்சையும் வஞ்சனையும் பூதலம் எங்கும் மிஞ்சினதால் மெய்யும் கருணையும் தழைத்திடவே வேண்டிய விதங்களில் உழைத்திடுவோம் | |
| வீரம் என்பது கொலையன்று வெற்றியும் அதனால் நிலையன்று தீரம் என்பது திடசாந்தம் தெரிவிப்பது நம் சித்தாந்தம் | |
| ஜாதியும் மதங்களும் வீட்டோடு சமத்துவம் யாவரும் நாட்டோடு நீதியும் அறங்களும் உலகெங்கும் நிலைத்திடத் தவம்புரி கிறசங்கம் | |
| சாந்தியைப் படித்தது நம்நாடு சத்தியம் கொடுத்தது நம்நாடு காந்தியைத் தருவது நம்தேசம் கடமை நமதே உபதேசம். | |