| கன்று நலிந்திடப் பாலெல்லாம் கறந்து புசித்தவன் சண்டாளன் ஒன்றுந் தெரியேன் ‘ஏழை’ என்றிடும் ஒன்றே என்குறை அதற்காக | (நானோ) |
| கள்ளைக் குடிப்பவன் சண்டாளன் காமத் தலைபவன் சண்டாளன் கொள்ளை அடிப்பவன் சண்டாளன் கூடிக்கெடுப்பவன் சண்டாளன் ‘அள்ளித் தெளிக்கா’ப் பணக்காரன் ஆபத் துதவான் சண்டாளன் வெள்ளைத் துணியொன் றில்லாமல் வேலை செய்வேன் அதற்காக | (நானோ) |
| தெய்வ மிகழ்ந்தவன் சண்டாளன் தீனரைக் கெடுத்தவன் சண்டாளன் பொய்யுரை பேசிப் பிறர்கேடே புரிந்து பிழைப்பவன் சண்டாளன் ‘ஐய அடைக்கலம்’ என்றோரை ஆதரிக் காதவன் சண்டாளன் வெயில் மழை யென்றில்லாமல் வேண்டிய செய்வேன் அதற்காக | (நானோ) |
| ஆலயத் துள்ளே அபசாரம் அறிந்தே புரிந்தவன் சண்டாளன் கூலியை மறைத்தவன் சண்டாளன் கோள்சொல்லிப் பிழைப்பவன் சண்டாளன் வேலியைக் கடந்தே பிறன்பயிரை வேண்டுமென் றழித்தவன் சண்டாளன் காலையும் மாலையும் இல்லாமல் கஷ்டப் படுவேன் கள்ளமிலேன் | (நானோ) |