| பணமிருந்தார் என்பதற்காய்ப் பணிந்திடாத மேன்மையும் பயமுறுத்தல் என்பதற்கே பயந்திடாத பான்மையும் குணமிருந்தார் யாவரேனும் போற்றுகின்ற கொள்கையும் குற்றமுள்ளார் யாரென்றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமிருந்தார் ஏழையென்று கைவிடாத ஏற்றமும் இழிகுலத்தார் என்று சொல்லி இகழ்ந்திடாமல் எவரையும் மனமிகுந்தே இனிமைவேண்டும் தமிழ்மொழியால் ஓதிநீ மாநிலத்தில் எவருங்கண்டு மகிழுமாறு சேவைசெய். ஓடிஓடி நாட்டிலெங்கும் உண்மையைப் பரப்புவாய் ஊனமான அடிமைவாழ்வை உதறித்தள்ள ஓதுவாய் வாடிவாடி அறம்மறந்து வறுமைப்பட்ட தமிழரை வாய்மையோடு தூய்மைகாட்டும் வலிமை கொள்ளச் செய்குவாய். கூடிக்கூடிக் கதைகள் பேசிச் செய்கையற்ற யாரையும் குப்பையோடு தள்ளிவிட்டுக் கொள்கையோடு நின்று நீ | | |
|
|