வெட்கங்கெட்டவன் நாய்; பிறரோடு நன்றாக நட்பு கொள்ளாதவன்
நாய்;
பெரியார்களைப்
பாதுகாக்காதவன் நாய்; பிறருடைய பணியாளனாய்
இருந்து
வயிறு வளர்க்கின்றவன் நாய்; அழகற்ற
ஆபரணங்களை அணிந்த
பரத்தையர்
சேரியிலே பணமில்லாமல் திரிகின்றவன் பருத்தி விற்பனை
செய்யும்
இடத்திலே
அலைந்து கொண்டிருக்கும் நாய்’’ (பா.88)
ஒழுக்கமற்றவனை நாயைப் போன்றவன் என்று கூடச் சொல்லவில்லை.
இவ்வாசிரியர். நாய்தான்
என்று உருவகமாகவே உரைத்துவிட்டார்; இதனால்
ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கிறார்
இவ்வாசிரியர் என்பதைக்
காணலாம்.
மனைவியின் கடமை
இல்லாளின் கடமையைப் பற்றி இவ்வாசிரியர் கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது. குடும்பத்தை
நடத்தும் பொறுப்பு முழுவதும் பெண்களைச்
சேர்ந்தது என்ற கருத்தையே இவர் வலியுறுத்துகிறார்.