தன் கணவனுடைய வருமானத்தின் அளவைத் தெரிந்து கொள்ள
வேண்டும்;
அந்த வருமானத்திற்குத்
தகுந்த அளவிலே செலவு
செய்யவேண்டும்;
சுற்றத்தார்கள் மேல் சீறி விழாமல் அவர்களை அன்புடன்
ஆதரிக்க வேண்டும்;
விருந்தினர்களை உபசரிக்க வேண்டும்; செல்வத்தைக்
கொடுக்கும் தெய்வத்தை
எந்நாளும் வணங்கவேண்டும்; இவைகளே
பெண்களின்
சிறப்பாகும். (பா.43)
பெண்கள் படித்திருக்க
வேண்டும் என்னும் கருத்தும் இவ்வெண்பாவில்
அடக்கம். பெண்களுக்குப் படிப்பில்லாவிட்டால், கணவன் வருவாய்க்குத்
தக்கவாறு
செலவு செய்யும் கணக்கு அவர்களுக்கு எப்படித் தெரியும்?
இச்செய்யுள் செல்வம் கொடுக்கும் தெய்வத்தை வணங்கச் சொல்லுகிறது.
வள்ளுவர் கணவனையே தெய்வமாக வணங்கச் சொல்லுகிறார். இது
குறிப்பிடத்தக்கது.
சிறந்த கருத்துக்கள் சில
இன்னும் பல சிறந்த கருத்துக்கள் இந்நூலிலே உண்டு. அவைகளில்
சிலவற்றைக் காண்போம்.
நன்றாகத் தமிழ்மொழியைப் படிக்காதவன்-தமிழ் இலக்கிய
இலக்கணங்களிலே தேர்ச்சி பெறாதவன்-கவிகள்
எழுதுவானாயின் அது
சிரிப்புக்கிடமாகும். அச்செய்யுளிலே இனிய சொற்களோ, அரிய பொருளோ
அமைந்திருக்க முடியாது. ஆதலால் அப்பாடலைப் படிப்போர் இதுவும்
பாட்டுதானா? என்று எள்ளி நகைப்பார்கள்.
|