வெளி வேடத்தால் பயன் இல்லை; பிறர் வசை கூறினாலும்
பொறுத்துக்கொள்ளும்
பொறுமைக் குணம் வேண்டும். துறவற நெறியைப்
பின்பற்றி நடக்க முடியாதவர்கள் துறவறம்
பூணுவதை விட இல்லறத்தில்
வாழ்வதே ஏற்றதாகும்.
சிறுபஞ்ச மூலச் சிறப்பு
நான்கு வரிகள் கொண்ட பாடலிலே ஐந்து பொருள்களை அமைத்துப்
பாடுவதற்கு
ஆற்றலும் புலமையும் வேண்டும். இவ்வகையில் நூறு
பாடல்களைப்
பாடிய இவ்வாசிரியர்
திறம் போற்றத்தக்கது. இவ்வாசிரியர்
பெருமையையும்,
இந்நூலின் சிறப்பையும் பாராட்டிக்
கூறும் பாயிரச் செய்யுள்
ஒன்று இந்நூலின்
இறுதியிலே அமைந்திருக்கின்றது.
|