15. ஏலாதி
நூல் வரலாறு
ஏலாதி என்பது ஒரு மருந்தின் பெயர். அந்த மருத்தின் பெயரே இந்த
நூலுக்குப்
பெயராயிற்று. திரிகடுகம். சிறுபஞ்சமூலம் என்பவை போன்ற பெயரே
ஏலாதி என்னும்
பெயரும்.
ஏலம், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இந்த ஆறும்
ஏலாதியாம்.
இதுவே பண்டை மருத்துவ நூலார் கொள்கை. இந்த ஆறு
சரக்குகளையும் சேர்த்துச் செய்த
சூரணம் உடல் நோய்க்கு மருந்தாகும்.
ஏலாதி
என்னும் இந்நூலிலே ஒவ்வொரு பாட்டிலும்
ஆறு செய்திகள்
கூறப்படுக்கின்றன.
இந்த ஆறு செய்திகளையும் அறிந்து பின்பற்றி
வாழ்வோர் மன நோயில்லாமல்
வாழ்வார்கள். இந்தக் கருத்தில்தான்
இந்நூலுக்கு ஏலாதி
என்று பெயர்
வைத்தனர்.
இந்நூலாசிரியர் பெயர் கணிமேதையார் என்பது. கணிமேதாவியார்
என்றும்
வழங்குவர். இப்பெயர் காரணப் பெயராகவே காணப்படுகின்றது.
கணியாகிய மேதையார்
என்று பொருள்கொண்டால் கணக்கிடுகின்றவராகிய
பேரறிவு படைத்தவர் என்பது பொருள்.
கணக்கிலே வல்லவர்; தமிழிலும்
பேரறிவு படைத்தவர் இவ்வாசிரியர்.
ஏலாதியில் உள்ள
வெண்பாக்கள் எண்பது. சிறப்புப்பாயிரம், கடவுள்
வாழ்த்து வெண்பாக்கள் இரண்டு,
ஆக 82
வெண்பாக்கள் இருக்கின்றன.
|