பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்109

New Page 1
  மாண்டுஅமைந்து ஆராய்ந்தமதி, வனப்பே, வன்கண்மை
ஆண்டுஅமைந்த கல்வியே, சொல்லாற்றல்,-பூண்டுஅமைந்த
காலம்அறிதல், கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்.
 

ஒழுக்கத்திலே சிறந்து, நூலறிவு பெற்று, தன் நாட்டு நிலைமையையும்
அந்நிய நாட்டு நிலைமையையும் ஆராயத்தக்க அறிவு
நிறைந்திருக்கவேண்டும்.

பார்த்தவர்கள் உள்ளத்தைக் கவரத்தக்க - மற்றவர்கள் கண்டவுடனேயே
மதிக்கத்தக்க - அழகிய தோற்றம் வேண்டும்.

பகைவர்க்குப் பயந்து நடுங்காமல், உண்மையை எடுத்துக்கூறி
வழக்கிடத்தக்க அஞ்சாமைக் குணம் அமைந்திருக்கவேண்டும்.

சிறந்த கல்வி - அதாவது பல துறைகளைப் பற்றியும் படித்து -
அவைகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கும் கல்வியும்
வேண்டும்.

அன்பர்கள் பகைவர்கள் அனைவர் உள்ளத்தைக் கவரும்படியும், எதிரிகள் பதில் கூறுவதற்கு அஞ்சும்படியும் ஆணித்தரமாகக் காரண காரியங்களை விளக்கிப் பேசும் சொல்வன்மையும் வேண்டும்.

இன்ன காலத்தில் இன்ன காரியத்தைச் செய்தால் வெற்றி பெறலாம்; இன்ன சமயத்தில்தான் இன்ன காரியத்தைச் செய்யவேண்டும்; என்று
துணிந்து காலமறியும் குணம்வேண்டும்.

இத்தகைய ஆறு குணங்களும் அமைந்தவர்களே தூதராவதற்குத்
தக்கவர்கள். தூதுவர்க்கு இத்தகுதி இன்றும் ஏற்றனவாயிருப்பதைக் காணலாம். தமிழர்கள் அந்நிய