பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்113

New Page 1
மறுமையின்பத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் தமிழரிடம் குடி
கொண்டிருந்தது. விருந்தினரை எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும்
என்பதைப்பற்றி ஏலாதியின் செய்யுள் ஒன்று விளக்கிக் கூறுகின்றது.
 
  ‘‘இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல்,-மென்சொல்
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து
 

மென்மையான சொல்லையும், மயிற்பீலியின் அடியை ஒத்த கூர்மையும்
வெண்மையும் அமைந்த பற்களையும் உடைய பெண்ணே! விருந்தினராக
வருகின்றவர்கள் அனைவரிடமும் இனிய சொற்களையே பேசவேண்டும்;
அவர்களுடன் உள்ளம் கலந்து உறவாடவேண்டும்; தங்குவதற்கு வசதியான
இடம் கொடுக்கவேண்டும்; ஆடை அணி முதலியவைகளையும் அளிக்க
வேண்டும்; இனிய உணவும் இடவேண்டும்; கடுஞ்சொல்லற்ற இனிய
மொழிகளையே எந்நாளும் பேசவேண்டும்; இவ்வாறு விருந்தினர்களை
உபசரிப்பவனைத் தேவர்கள் தமது விருந்தினனாக ஏற்றுக்
கொள்வார்கள்’’.                                                                        (பா.7)

இச்செய்யுள் விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகள்
இன்னின்னவை என்பதை எடுத்துரைத்தது.

கள்ளருந்துவது ஒழுக்கக்கேடான செயல்; புலால் உண்ணுவதைக்
கைவிடவேண்டும்; கொல்லா விரதத்தை மேற்கொள்ளவேண்டும்; கொலை
செய்வாருடன் கூட்டுறவே கூடாது; இக்கருத்து பல பாடல்களிலே
காணப்படுகின்றன. பெண்டிர் சொல்வதைப் பின்பற்றக் கூடாது. அவர்களிடம்
இரகசியங்களை வெளியிடக்கூடாது. என்று உரைக்கின்றது ஒரு செய்யுள்.