பக்கம் எண் :

114சாமி சிதம்பரனார்

New Page 1

பொதுமகளிர் - வேசையர் - பாடும் பாடலைக்கேட்கக்கூடாது; அவர்கள்
ஆடும் நாடகத்தையும் பார்க்கக் கூடாது; அவர்கள் பாடி ஆடுகின்ற
இடத்தையடைவோர் பகையைப் பெறுவார்கள்; பழிச்சொல்லை அடைவார்கள்; பாவத்திற்கு ஆளாவார்கள்; மற்றவர்கள் அவர்களை
வெறுத்துரைப்பார்கள்; சாக்காட்டுக்கும் ஆளாவார்கள்; என்று கூறுகிறது ஒரு
செய்யுள்.

திருக்குறளின் கருத்துக்களும் இந்நூலில் பல பாடல்களில்
காணப்படுகின்றன. இந்நூலைப் படிப்போர் அவைகளைக் கண்டறியலாம்.
தமிழர் நாகரிகத்தை அறிவதற்கு இந்நூலும் துணை செய்கின்றது.