பொதுமகளிர் - வேசையர் - பாடும் பாடலைக்கேட்கக்கூடாது; அவர்கள்
ஆடும்
நாடகத்தையும் பார்க்கக் கூடாது; அவர்கள் பாடி ஆடுகின்ற
இடத்தையடைவோர்
பகையைப் பெறுவார்கள்; பழிச்சொல்லை அடைவார்கள்;
பாவத்திற்கு ஆளாவார்கள்;
மற்றவர்கள் அவர்களை
வெறுத்துரைப்பார்கள்;
சாக்காட்டுக்கும் ஆளாவார்கள்; என்று
கூறுகிறது ஒரு
செய்யுள்.
திருக்குறளின் கருத்துக்களும் இந்நூலில் பல பாடல்களில்
காணப்படுகின்றன.
இந்நூலைப் படிப்போர் அவைகளைக் கண்டறியலாம்.
தமிழர்
நாகரிகத்தை அறிவதற்கு
இந்நூலும் துணை செய்கின்றது.
|