16. ஆசாரக் கோவை
நூலின் பெருமை
ஆசாரம், கோவை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஆசாரக்
கோவை
என்று
ஆயிற்று. ஆசாரம் வடமொழி; கோவை தமிழ்ச் சொல்.
ஆசாரம்
என்றால் பின்பற்றக்
கூடியவை; கோவை என்றால் தொகுப்பு.
பின்பற்றக் கூடிய
ஒழுக்கங்களைத் தொகுத்துக்
கூறுவது என்பதே ஆசாரக்
கோவை என்பதன்
பொருள்.
இன்ன காரியங்களைச் செய்; இன்ன காரியங்களைச் செய்யாதே; என்று
கட்டளையிடும்
நூல்களுக்கு வடமொழியிலே ஸ்மிருதிகள் என்று பெயர்.
இந்த
ஆசாரக் கோவையும் ஒரு
ஸ்மிருதி போலவே காணப்படுகின்றது.
இன்னின்ன
செயல்கள் செய்யத்தக்கவை; இன்னின்ன
செயல்கள்
செய்யத்தகாதவை; என்று
கண்டிப்பாக உத்தரவு போடுவதுபோலவே பல
பாடல்கள் காணப்படுகின்றன.
வடமொழி ஸ்மிருதியில் உள்ள பல கருத்துக்களை இந்நூலிலே
காணலாம்.
இது
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல்
ஆதலால்
இதில் கூறப்படும்
ஒழுக்கங்களிலே சிலவற்றை இக்காலத்தார்
பின்பற்ற
முடியாமலிருக்கலாம்.
வடமொழியில் உள்ள
ஸ்மிருதிகளிலே இன்னின்ன வருணத்தார்,
இன்னின்ன ஆசாரங்களைப் பின்பற்றவேண்டும்
என்று சொல்லப்
பட்டிருக்கின்றன. இந்த ஆசாரக் கோவையிலே சாதிக்கொரு
நீதியென்று
பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள்
|