சுறுசுறுப்புள்ள எறும்பு, தூக்கணங்குருவி, காக்கை என்ற இவைகளைப
போல்
ஒவ்வொருவரும் தங்களுடைய நல்ல கடமைகளைப் பின்பற்றி
அவைகளைச்
சோர்வில்லாமல் செய்யவேண்டும்; தமது கடமைகளை
அவ்வாறு
செய்பவர்களிடந்தான்
எவ்வகையிலும் ஆசாரம் பெருகி நிற்கும்.’’
(பா.96)
ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களை எறும்பைப்போல் சுறு
சுறுப்புடன்
முயன்று
முடிக்கவேண்டும்.
தூக்கணங்குருவி தன் கூட்டைத்
திறமையுடன்
கட்டும்; கூடுகட்டத்
தொடங்கினால் அரைகுறையாக
விட்டுவிடாது;
முடித்தே
தீரும். காக்கை கூடி வாழும்
குணம் உள்ளது; தனித்துண்ணாது; தன்
இனத்தையும் கரைந்து அழைத்து ஒன்றுகூடி
உண்ணும். இந்த மூன்று
பிராணிகளின் பண்பை மக்கள் பின்பற்றவேண்டும்.
சுறுசுறுப்பு,
தொட்டதை
நிறைவேற்றுதல், ஏனை மக்களுடன்
இணைந்து
வாழ்தல், இந்த முக்குணமும்
பொருந்தியவர்களிடமே ஆசாரம் வளரும்.
ஆசாரத்திற்கு விலக்கானவர்கள்
யார் யார் ஆசாரத்திற்கு
விலக்கானவர்கள்; ஆசாரத்தைப் பின்பற்ற
முடியாதவர்கள்; என்று இந்நூலின் இறுதி வெண்பாவில்
கூறப்பட்டுள்ளது.
ஆசாரத்தைப் பின்பற்ற முடியாதவர்கள் ஒன்பது பேர். அவர்கள்; அந்நிய
நாட்டான்,
வறியவன், மூத்தோன், சிறுவன், உயிர் இழந்தோன்,
பயந்தவன்,அளவுக்குமேல் உண்பவன், அரசாங்க
அலுவல் பார்ப்போன்,
மணமகன், ஆகிய
இவர்கள்.
|