இந்த ஒன்பதின்மரும் ஆசாரத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்.
இந்த நாட்டு ஆசாரங்களை அறியாத அந்நிய நாட்டான் இந்த நாட்டு
ஆசாரங்களை
அறிந்து பின்பற்ற
முடியாது.
வறுமையுள்ளவனும் இந்நூலிலே கூறப்பட்டுள்ள ஆசாரங்களைப்
பின்பற்ற
முடியாது.
வயிற்றுப் பிழைப்பிற்காக
உழைப்பதற்கே அவனுக்கு
நேரம் போதாது.
மறதி, உடல்சோர்வு, சுறுசுறுப்பாக நடந்து காரியம் செய்ய முடியாமை.
இவைகள்
எல்லாம் வயதேறியவன்
இயல்பு. இவைகள் முதுமையின்
துணைகள்.
ஆகையால்
முதியவனாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது.
ஆசாரம் இன்னது, அநாசாரம் இன்னது என்று பகுத்தறிய முடியாத
சிறுவர்களாலும்
ஆசாரத்தைப்
பின்பற்ற முடியாது.
உயிர்போன பிணத்தினால் எந்த ஆசாரத்தைத்தான் பின்பற்ற முடியும்?
பயந்தாங் கொள்ளியும், ஆசாரத்தைக் கைவிட்டு விடுவான். அவனால்
ஒன்றையும்
உருப்படியாகச்
செய்ய முடியாது.
மிகுதியாகச் சாப்பிடுகின்றவன் எப்பொழுதும் உண்பதிலேயே நாட்டங்
கொண்டிருப்பான். உணவு கிடைத்தால் போதும். ஆசாரங்களைப் பற்றி
அவனுக்குக்
கவலையில்லை.
|