பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்127

New Page 1

கண்ணனைப் பற்றிய குறிப்பும், பலராமனைப் பற்றிய குறிப்பும்
இந்நூலிலே காணப்படுகின்றன.

இந்நூலிலே பாரதக் கதையும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
‘‘துரியோதனாதியரும், பாண்டவர்களும், சூதாடினார்கள்; தங்கள்
தாயபாகத்தையே பணையப் பொருளாக வைத்துச் சூதாடினார்கள். இதன்
காரணமாகச் சகோதரர்களான, நூற்றுவரும், ஐவரும் பகைவர்களாயினர்;
போர் செய்தனர். ஆதலால் உறவினருடன்சூதாடக் கூடாது’’ என்று கூறுகிறது
ஒரு செய்யுள்.

பெரியோரைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் பயன் பெறுவார்கள்.
இக்கருத்தை விளக்க இராமாயண வரலாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 

  ‘‘பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான்-இலங்கைக்கே
போந்து இறைஆயதூஉம் பெற்றான்;பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்
 

இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன்
இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான்.
பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகிவிட்டான். ஆகையால்
பெரியாரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை’’

இச்செய்யுள் இராமாயணத்தின் ஒரு பகுதி. இதிலே விபீஷணன்
இராமனைச் சேர்ந்ததன் நோக்கம் இன்னதென்று குறிக்கப்பட்டிருப்பதைக்
காணலாம். இத்தகைய கதைக் குறிப்புக்கள் பல பழமொழிப் பாடல்களிலே
காணப்படுகின்றன.

தமிழ் நாட்டு வரலாறுகள்

குலத்தொழில் போதிக்கப்பட வேண்டாம். தானே வந்துவிடும். இதைக்
குறிக்கும் பழமொழி ‘‘குலவிச்சை