கண்ணனைப் பற்றிய குறிப்பும், பலராமனைப் பற்றிய குறிப்பும்
இந்நூலிலே
காணப்படுகின்றன.
இந்நூலிலே பாரதக் கதையும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
‘‘துரியோதனாதியரும்,
பாண்டவர்களும், சூதாடினார்கள்; தங்கள்
தாயபாகத்தையே பணையப் பொருளாக வைத்துச்
சூதாடினார்கள். இதன்
காரணமாகச் சகோதரர்களான, நூற்றுவரும், ஐவரும்
பகைவர்களாயினர்;
போர்
செய்தனர். ஆதலால் உறவினருடன்சூதாடக் கூடாது’’ என்று கூறுகிறது
ஒரு
செய்யுள்.
பெரியோரைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் பயன் பெறுவார்கள்.
இக்கருத்தை
விளக்க
இராமாயண வரலாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
|