பக்கம் எண் :

134சாமி சிதம்பரனார்

New Page 1

எப்பக்கம் பட்டாலும் சுடும். ஆதலால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும்
பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இந்த இருதலைக் கொள்ளியைப் போன்ற
மனிதர்களும் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் நாம் அளவோடு
பழகவேண்டும். இன்றேல் அவரால் நாம் தீமையடைவோம். இத்தகைய
இருதலைக் கொள்ளிகள் யார் என்பதை எடுத்துரைக்கின்றது ஒரு வெண்பா.
அது கீழ்வருமாறு.

‘‘தம்முடைய நட்பினரிடம் போவது; அவர்கள் மகிழும்படி பேசுவது;
குற்றமில்லாதவர்போல நடிப்பது; இதைப்போலவே பகைவர்களிடமும்
போவார்; அவர்களிடமும் பேசுவார்; குற்றமற்றவர்களைப் போல நடிப்பார்;
இவர்கள் இருவருள் யாருடனும் ஒட்டமாட்டார்; ஒருவரிடமும்
ஒன்றுபட்டிருக்க மாட்டார். இவர்தான் இருதலைக் கொள்ளியாவர்.
 

  பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவுஇன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே
இருதலைக்கொள்ளி என்பார்’’
கிணற்றுத் தவளை நாட்டு வளப்பம் அறியாது
 

என்பது ஒரு பழமொழி. குறுகிய அறிவு கூடாது. பரந்த அறிவு
பெறவேண்டும் என்பதே இப்பழமொழியின் கருத்து, மக்கள் கிணற்றுத்
தவளையாக வாழக்கூடாது என்று கூறுகிறது ஒரு வெண்பா.

‘‘உண்ணுவதற்கினிய தண்ணீர் இதுதான், இதுபோன்ற
தண்ணீர்வேறிடத்தில் இல்லை என்று கிணற்றிலே உள்ள தவளை
சொல்லிக்கொண்டிருக்கும்; மக்களும் அத்தவளையைப் போல்
ஆகிவிடக்கூடாது. ஒரே புத்தகத்தை நாள் முழுவதும்,
வெறுப்பில்லாமல் ஓதிக்கொண்டிருப்பதனால் பயன் இல்லை. அந்நூலை
மட்டுமே ஆராய்ந்து கற்பதனால் மட்டும்