பக்கம் எண் :

136சாமி சிதம்பரனார்

New Page 1

கூறும். சந்திரனைப் பார்த்து நாய்கள் குரைத்தால் அதனால் நிலவொளி
குறைந்து விடாது. இந்தப் பழமொழியைக் கொண்ட செய்யுள் ஒன்று
இந்நூலிலே உண்டு.

‘‘சிறியவர்கள் பெரியவர்களை முறைப்படி தெரிந்து
கொள்ளமாட்டார்கள்; தெரிந்துகொள்ளக்கூடிய தகுதியும் அவர்களிடம்
இருக்காது; பெரியவர்கள் எளியவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
ஆதலால் அவர்களை எளியவர்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களுக்குச்
சமமாகக் கருதுவர்; தகாத சொற்களை அவர்களிடம் பேசுவர். இப்படிப்
பேசுதல், சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றதாகும்.
 

  நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியார்ஆல் என்று பெரியாரைத்
தங்கள் நேர் வைத்துத் தகவுஅல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத்து அற்று’’.
 

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது ஒரு பழமொழி. இதனை
உயர்ந்தோர்க்கு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றார் இந்நூலாசிரியர்.
உயர்ந்தவர்கள் வறுமையால் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தமது
நிலையிலே தவறமாட்டார்கள். இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள். புலி
எவ்வளவு பசியால் வாடினாலும் தனது நிலையிலே தவறாது. வழக்கமாகத்
தான் உண்ணும் புலால் கிடைத்தால் தான் உண்ணும்; புல்லைத் தின்னாது.

நாய்க்கு முழுத்தேங்காய் கிடைத்ததுபோல் என்றொரு பழமொழி
உண்டு. முழுத்தேங்காயை நாயினிடம் போட்டால் அதனை அது என்ன
செய்யும்? தானும் அதைத் தின்னாது; பிறரையும் அதை எடுக்கவிடாது;
சும்மா காத்துக் கொண்டுதான் கிடக்கும். ஒருவன் செல்வத்தை நிரம்பச்
சேர்த்து வைத்துக்