பக்கம் எண் :

138சாமி சிதம்பரனார்

New Page 1
  ‘‘வினா முந்துறாத உரையில்லை; இல்லைக்
கனாமுந்துறாதவினை
 

கேள்வியில்லாமல் விடை பிறக்காது; அதுபோலக் கனாநிகழாமல் எந்தக்
காரியமும் நடைபெறுவதில்லை’’

பெண்கள் தம்முடைய கற்பைத் தாமேதான் காப்பாற்றிக் கொள்ள
வேண்டும். நாயின் வாலை நிமிர்த்தமுடியாது. அதுபோலத் தமது கற்பைக்
காப்பாற்றிக் கொள்ள எண்ணாத பெண்களைக் காவலிலே வைத்து
அவர்களைக் கற்புள்ளவர்களாக்கிவிட முடியாது என்று நம்பி வந்தனர்.
 

  ‘‘நிறையான் மிகுகில்லா நேரிழையாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா;- அறையோ!
வருந்த வலிதினின் யாப்பினும், நாய்வால்
திருந்துதல் என்றுமே இல்.
 

கற்பினால் சிறந்து நிற்காத பெண்களைக் காவலிலே பிடித்து வைத்துக்
கற்புள்ளவர்களாக ஆக்கிவிடுதல் என்பது ஆகாத காரியம்; நான் இதை
அறைகூவிச் சொல்லுகின்றேன். வருந்தும்படி உறுதியாக நிமிர்த்திக்

கட்டிவைத்தாலும் நாய் வால் எந்தக் காலத்திலும் நேராகி விடாது’’

பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இந்நூல்
வலியுறுத்துகின்றது. கல்வியினால் வரும் சிறப்பைக் காட்டினும்
குடிப்பிறப்பால் உள்ள குணமே உயர்ந்தது என்று கூறுகிறது ஒரு பாட்டு.
 

  ‘‘கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப்பிறந்தார்
மற்றொன்று அறிவாரின் மாணமிகநல்லர்
 

நற்குடியிலே பிறந்தவர் கல்வி கற்றிருப்பதாகிய சிறப்பு ஒன்று
இல்லாவிடினும் தாழ்ந்த குடியிலே பிறந்த கற்றாரைக் காட்டினும் மிகவும்
உயர்ந்தவர்கள்’’