பக்கம் எண் :

140சாமி சிதம்பரனார்

New Page 1

கற்பிலே சிறந்து நின்று, தம்மைத்தாமே காத்துக்கொள்ளாத
பெண்களைச் சிறையிலே வைத்து அவர்கள் கற்பைக் காப்பற்றிவிட
முடியாது’’.

இது பழமொழிப் பாட்டு, இப்பாட்டின் பொருள் கீழ்வரும்
திருக்குறளோடு ஒத்திருக்கின்றது.
 

  ‘‘சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
 

பெண்களைக் காவல் வைத்துக் காப்பதால் என்ன பயன் உண்டாகும்?
அவர்கள் தங்கள் கற்பால் தம்மைத்தாமே காத்துக் கொள்வதுதான்
சிறந்தது’’.

(கு.57)

மேலே காட்டிய பழமொழிப் பாட்டும், இத்திருக்குறளும் ஒரே
கருத்துடன் அமைந்திருப்பதைக் காணலாம்.
 

  ‘‘ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை-அந்நாடு
வேற்று நாடாகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.
 

மிகவும் கற்றவர்கள் அறிவுள்ளவர்கள்; அவ்வறிவுள்ளவர்களின் பெருமை
நான்கு திசைகளில் உள்ள நாடுகளிலும் செல்லும்; எந்நாடும் அவர்களை
ஏற்றுக்கொள்ளும்; அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாடு
அவர்களுக்கு வேற்று நாடாகக் காணப்படாது; தம்முடைய நாடாகவே

காணப்படும். அப்படியானால் அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும்
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போக வேண்டாம்’’.

இது கல்வியின் பெருமையைக் குறித்தது. கற்றவர்கள் நாடு, மொழி,
இனபேதம் பாராட்ட மாட்டார்கள். இந்த உண்மையை எடுத்துரைத்தது
இப்பழமொழிச் செய்யுள்.