மிகவும் கற்றவர்கள் அறிவுள்ளவர்கள்; அவ்வறிவுள்ளவர்களின் பெருமை
நான்கு
திசைகளில் உள்ள நாடுகளிலும் செல்லும்; எந்நாடும் அவர்களை
ஏற்றுக்கொள்ளும்;
அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாடு
அவர்களுக்கு
வேற்று நாடாகக்
காணப்படாது; தம்முடைய நாடாகவே
காணப்படும்.
அப்படியானால்
அவர்கள் எந்த
ஊருக்குச் சென்றாலும்
கட்டுச்சோறு
கட்டிக்கொண்டு போக வேண்டாம்’’.
இது கல்வியின் பெருமையைக் குறித்தது. கற்றவர்கள் நாடு, மொழி,
இனபேதம்
பாராட்ட மாட்டார்கள். இந்த உண்மையை எடுத்துரைத்தது
இப்பழமொழிச்
செய்யுள்.
|