பக்கம் எண் :

142சாமி சிதம்பரனார்

New Page 1
இத்திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே
கருத்தமைந்தவை.
 
  ‘‘முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ?
 
முன் பிறப்பிலே நல்ல வினைகளைத் தாராளமாகச் செய்யாதவர்கள்
பின்வரும் பிறப்பிலே பெரிய செல்வத்தைப் பெற முடியுமா? முன் பிறப்பிலே
நல்லறங்களைச் செய்தவர்கள் தாம், இப்பிறப்பிலே செல்வங்களைப் பெற்றுச்
சிறந்து வாழ முடியும்; என்று கூறியது இப்பழமொழிப் பாட்டு.
 
  ‘‘இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

(கு. 270)

இவ்வுலகில் தவம் புரிவோர் சிலர்; தவம் புரியாதவர்கள் பலர்;
ஆதலால்தான் செல்வம் உள்ளவர்கள் சிலராகவும், வறுமையுள்ளவர்கள் பலராகவும் இருக்கின்றனர்’’

முன் பிறப்பில் செய்த தவமே இப்பிறப்பில் செல்வம் எய்திச் சிறந்து
வாழ்வதற்குக் காரணம். முன் பிறப்பில்தவம் செய்யாமையே இப்பிறப்பில்
வறுமையுற்று வருந்தி வாழ்வதற்குக் காரணம்; என்று கூறுகிறது இக்குறள்.
இக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாட்டும் ஒத்த கருத்துள்ளவை.

இவ்வாறு திருக்குறள் கருத்துடன் ஒத்துக் காணப்படும் பழமொழிப்
பாடல்கள் பல உண்டு.

பழக்க வழக்கங்கள்

இந்த நூலிலே ஒரு வெண்பாவில் நாய்கொண்டால் பார்ப்பாரும்
தின்பார் உடும்பு
என்ற பழமொழி காணப்படுகின்றது. கீழோரிடமிருந்து
நல்ல சொற்கள் பிறந்தால் அதை இகழாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்
என்று கூறுகிறது அச்செய்யுள். நாய் கௌவிய உடும்பை, நாய் கவ்வியது
என்று