அக்கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தான் கடன் வாங்கவில்லை
என்று
மறுத்தால்-அவனை நல்ல
பாம்பை அடைத்த குடத்திலே கைவிடச்
சொல்லுவார்கள்; அவன்உண்மையிலே கடன் வாங்காவிட்டால், குடத்தில்
உள்ள
பாம்பு அவன் கையைக்கடிக்காது;
அவன் கடன் வாங்கியிருந்து,
வாங்கவில்லை
என்று பொய் புகல்வானாயின்
அப்பாம்பு
அவன் கையைக்
கடித்துவிடும். இதுவே
அக்கால மக்கள் நம்பிக்கை. இதனைக்
‘‘கடம்
பெற்றான் பெற்றான் குடம்’’ என்ற
பழமொழியில் முடியும் பாட்டால்
அறியலாம்.
அக்காலத்திலே மன்னர்கள் தனி அதிகாரம் செலுத்தி வந்தனர்.
அவர்கள்
அநீதி செய்யக் கூடாது.
மன்னர்களின் மனத்திலே
சினம்
மூளும்படி நடந்து கொள்ளுவது,
தூங்குகின்ற புலியைத்
தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் ஆகிவிடுமாம்.
|