பக்கம் எண் :

150சாமி சிதம்பரனார்

New Page 1
வீசுகின்றது. இந்தக் காற்றிலே கனிகள் உதிர்ந்துவிடும்; காய்கள் உதிராமல்
கிளைகளில் தங்கிவிடும்; என்று எதிர்பார்க்கலாம். ஆனால்
அப்படிநடக்கவில்லை. கனிகளிலே சில உதிராமல் தங்கிவிட்டன; காய்கள்
பல உதிர்ந்துவிட்டன. இந்த இயற்கை நிகழ்ச்சியை மனித
வாழ்வோடு இணைத்துக் காட்டுகின்றது ஒரு பாட்டு.
 
  ‘‘மற்றுஅறிவாம் நல்வினை; யாம் இளையம்; என்னாது
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்!
முற்றியிருந்த கனி ஒழியத், தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு
 

நல்வினைகள் செய்வதைப் பற்றிப் பிறகு எண்ணிப்பார்க்கலாம்.
இப்பொழுது நாம் இளமைப் பருவம் உள்ளவராகத்தானே இருக்கின்றோம்.
இப்பொழுதென்ன அவசரம் என்று நினைக்காதீர்கள்! கையில் பொருள்
உள்ள போதே ஒளிக்காமல் நல்லறங்களைச் செய்யுங்கள். முற்றியிருந்த கனி
உதிராமல் அப்படியே தங்கியிருக்கும்; கொடுங்காற்றால், பழுக்காத நல்லகாய்
உதிர்ந்து போவதும் உண்டு’’ (பாட்டு 19) இச்செய்யுள் மிகவும்அருமையான
செய்யுள். வயதேறியவர்கள் வாழ்வதும், இளையவர்கள் இறப்பதும் இயற்கை
என்பதை எடுத்துக் காட்டிற்று. இதன் மூலம் இளமைப் பருவத்தை நம்ப
வேண்டாம் என்றும் உரைத்தது.

மற்றொரு பாடல், மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியை
உதாரணமாகக் காட்டி ஒரு நீதியை உணர்த்துகின்றது.

நாய் கடித்தால் அதைத் திருப்பிக் கடிப்பவர் யாரும் இல்லை. கடித்த
நாயைத் திருப்பிக் கடிக்க வேண்டும் என்று எந்தப் பைத்தியக்காரனும்
கருதமாட்டான்.