கோபங்கொண்டு நாய்
தன் வாயால் கடிப்பதைக் கண்டும், தாம் அந்த
நாயைத் தம் வாயினால் கடிப்பவர் யாரும் இல்லை.
அதுபோல
மனிதத்தன்மையில்லாமல், கீழ்ப்பட்ட மக்கள் கீழான
வார்த்தைகளைக்கூறினால், உயர்ந்தவர்கள்,
அவைகளுக்கு மாறாகத் தாமும் கீழான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பாட்டு. 70)
மனிதத் தன்மையற்ற முறையில் வசை மொழிகளை அள்ளி
இறைப்பவர்களை,
நாய்கள், என்று
சொல்லிற்று இச்செய்யுள்.
மற்றொரு பாட்டு உலக இயற்கையை அப்படியே படம்பிடித்துக்
காட்டுகிறது.
மக்களுடைய சுயநலத்
தன்மையைத் தெளிவாக விளக்கிக்
காட்டுகின்றது.
|