பக்கம் எண் :

152சாமி சிதம்பரனார்

New Page 1
யிருப்பார்கள். குளிர்ந்த குன்றுகளையுடைய பாண்டியனே! ஒருவர் தாங்க முடியாத துன்பங்களை அடைந்தபோது அவருக்கு உறவினர்கள் மிகுதியாக
இருக்கமாட்டார்கள்; ஒரு சிலர்தான் உறவினர் என்று
சொல்லிக்கொள்ளுவார்கள்’’
 

(பாட்டு.113)

இன்றைய உலகிலே தமக்கென்று ஏதாவது சேர்த்து வைத்துக்
கொண்டிருக்கும் மக்கள்தாம் வாழ முடியும். ஒன்றுமில்லாத ஏழைகள் வாழ
முடியாது. செல்வம் படைத்தவர்களைத்தான் பலர் உறவு முறை பாராட்டிச்
சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளை எவரும், தங்கள் உறவினர் என்று
சொல்லிக் கொள்ள மாட்டார்கள். இந்த இயற்கை உண்மையை எடுத்துக்
காட்டிற்று இவ்வெண்பா.

நட்பைப்பற்றிச் சொல்லும் மற்றொரு அழகான பாட்டு குறிப்பிடத்தக்கது.
அச்செய்யுளில் உள்ள உவமானம் படிப்போர் உள்ளத்திலே அப்படியே
படிந்துவிடும்.

  ‘‘நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்!
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்.
 

நாயின் கால்களில் உள்ள சிறியவிரல்கள் இடைவெளியின்றி
நெருங்கியிருக்கும்.

இதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட
உதவி செய்யாதவர்களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து
அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால்
போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள்
தொலைத்தூரத்தில் இருந்தாலும்