பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்153

New Page 1

தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்’’.(பாட்டு.218)

இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.
பொருத்தமான உவமானங்கள்.

கல்வி கற்பதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, கற்காதவனைப்பற்றி
இழித்துரைக்கும் செய்யுட்கள் எல்லாம் மிகச் சிறந்தவைகள். கல்லாதவனுக்குக்
காட்டும் உவமானங்கள் படிப்போர்க்கு நகைப்பை ஊட்டுவன. அவற்றுள்
ஒரு செய்யுள் கீழ் வருவது,.
 

  ‘‘கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து
நல் அறிவாளர் இடைப்புக்கு,-மெல்ல
இருப்பினும் நாய் இருந்து அற்றே; இராஅது
உரைப்பினும் நாய்குரைத்து அற்று.
 

கல்வி கற்காமல் மரம்போல் நீண்டு வளர்ந்த ஒருவன் நல்ல
அறிஞர்கள் நடுவிலே இருப்பதற்குத் தகுதி அற்றவன். அவன
நல்லறிஞர்களின் நடுவிலே புகுந்து மெல்ல உட்கார்ந்திருந்தாலும், ஒரு நாய்
உட்கார்ந்திருப்பதுபோல ஆகும். சும்மா இருக்காமல் ஏதேனும் சொல்லத்
தொடங்கி விடுவானாயின், நாய் குரைத்ததுபோல ஆகிவிடும்’’.

இச்செய்யுள் மூடனை நாய்க்கு ஒப்பிட்டது. அவன் பேசுவதை நாய்
குரைப்பதற்கு ஒப்பாக உரைத்தது. நாய் குரைப்பதிலும் பொருள் இருக்காது;
வெறும் ஒலிதான் உண்டு. கல்லாதான் சொற்களிலும் பொருள் இராது;
வெறும் ஓசைதான் நிரம்பியிருக்கும்.

நகைப்பையூட்டும் மற்றொரு சிறந்தவெண்பா குறிப்பிடத்தக்கது.
பலராலும் இகழத்தக்க மனிதர்கள் இன்னார்