பக்கம் எண் :

154சாமி சிதம்பரனார்

New Page 1

என்று சுட்டிக் காட்டுகின்றது. அவ்வெண்பா, ஆழ்ந்த சிந்தனையும், அறிவும்
பெருந்தன்மையுள்ள குணமும் உடையவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின்
மதிப்புக் குரியவர்களாயிருப்பார்கள். தற்பெருமையும், வெகுளித் தன்மையும்
உள்ளவர்கள் பிறர் பழிப்புக்குத்தான் உரியவர்களாயிருப்பார்கள். இது
உலகில் நடக்கும் உண்மை நிகழ்ச்சி.

உறவினர்களிலே அதிகமாகப் பரிகசிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்
மைத்துனர்கள்; மச்சான் முறையிலே உள்ளவர்கள் எவ்வளவு
வேண்டுமானாலும் பரிகாசம் பண்ணலாம். தற்பெருமையுள்ளவர்களுக்கு
இத்தகைய மைத்துனர்கள் பெருகி விடுவார்களாம்.
 

  ‘‘கற்றனவும், கண் அகன்ற சாயலும், இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடுஎய்தும்; தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி, மருந்தில் தணியாத
பித்தன், என்று எள்ளப் படும்.
 

ஒருவனுடைய கல்வியைப் பற்றியும், தாராள குணத்தைப் பற்றியும்,
அவனுடைய குடும்பப் பெருமையைப் பற்றியும், பக்கத்தில உள்ளவர்கள்
பாராட்டிப் பேசவேண்டும். அப்பொழுதுதான் அவனுக்குப் பெருமை உண்டு.
இப்படியில்லாமல் தானே தன்னுடைய கல்வியைப் பற்றியும், தன்னுடைய
தாராளத் தன்மையைப் பற்றியும், குடும்பப் பெருமையைப் பற்றியும் புகழ்ந்து
பேசிக் கொண்டிருப்பானாயின் அவனுக்கு மைத்துனர்கள் பெருகி
விடுவார்கள். ‘‘அவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது; எவ்வளவு மருந்து
கொடுத்தாலும் அவன் பைத்தியம் தணியாது’’ என்று கேலி
பண்ணுவார்கள்’’

(பாட்டு.340)

தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுகின்றவன் பைத்தியக்காரன்; அவன்
பலர் நகைப்புக்குப் பாத்திரமாக