|
தன்னை நல்ல நிலையிலே வாழ வைத்துக் கொள்ளுகின்றவனும்
தானேதான்.
தன்னுடைய நிலைமையைக்
கெடுத்துத் தன்னைக் கீழ்
நிலையிலே தள்ளிக்
கொள்ளுகின்றவனும் தானேதான். தான் இருக்கும்
நிலையைக்
காட்டினும் இன்னும்
உயர்ந்த
நிலையிலே தன்னை வாழ
வைத்துக் கொள்ளுகின்றவனும் தானேதான்.
தன்னைத்
தலைமைப்
பதவியிலிருக்கும்படி முதன்மையாகச் செய்து
கொள்ளுகின்றவனும்
தானேதான்’’.
(பா.248)
வாழ்க்கைக்கு அடிப்படை தன்னம்பிக்கைதான் என்பதை இச்செய்யுள்
உணர்த்தியது. வணிகர்கள்,
அரசியல்வாதிகள், வேறு துறைகளில்
ஈடுபட்டிருப்பவர்கள் அனைவர்க்கும் தன்னம்பிக்கையே வெற்றப்
பாதைக்கு
வழிகாட்டும் விளக்காகும். இவ்வுண்மையை நாலடிச் செய்யுள் நமக்கு
அறிவிக்கின்றது.
செல்வத்தின் பயன்
ஒரு மனிதன் தன்னுடைய நன்மைக்காக மட்டும் செல்வம் சேர்ப்பதை
நாலடிப்
பாட்டுக்கள்
வெறுத்துரைக்கின்றன. உறவினர், ஊரினர், நாட்டினர்
நன்மைக்காகவே
பொருள்
சேர்க்கவேண்டும்;
என்று பல பாடல்களிலே
கூறப்படுகின்றன.
‘‘பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க.
ஏர் உழுது பெற்ற செல்வத்தைப் பலரோடும்பகிர்ந்து
உண்ணவேண்டும்’’
(பா.2)
‘‘ஆற்றப், பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின். (பா.6)
மிகவும் நிறைந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றவர்களே!
அவைகளை
வறியவர்களுக்குக்
கொடுங்கள்’’
|