|
இச்செய்யுள் வழங்காமலும், அனுபவிக்காமலும்
வைத்திருக்கின்றவனுடைய
செல்வம் அவனுக்கு உரியது
அன்று என்பதை விளக்கி உரைத்தது. இவை
போன்ற பல செய்யுட்கள் செல்வப் பொருளை வீணாகச் சேர்த்து
வைத்திருப்பதனால் பயனில்லை என்று கூறுகின்றன. வாழ்வதற்கும்,
வழங்குவதற்குந்தான் செல்வம் வேண்டும்
என்று கூறுகின்றன.
பெண்ணுரிமை
நாலடியார் காலத்திலே பெண்களுக்கு உரிமையிருந்ததில்லை. அவர்கள்
ஆண்களுக்கு
அடங்கி
நடக்கும் அடிமைகளாகத்தான் கருதப்பட்டார்கள்.
ஆயினும்
இல்லற வாழ்வு
தழைக்கப் பெண்கள்தாம்
காரணம் என்று
கருதப்பட்டனர். ‘‘ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்’’ என்ற
கொள்கை
தமிழகத்தில் நீண்டகாலமாக உண்டு. அன்பும்,
அறிவும்,
நற்பண்பும், திறமையும்
உள்ள பெண்களால்
தான் குடும்பங்கள்
சிறப்படையும்;
இவையற்ற பெண்கள்
வாழும் குடும்பத்திலே எந்த இன்பமும்
இராது;
அக்குடும்பமும்
பாழாகும்.
|