பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்159

New Page 1
விரும்பத்தகாத கொடுங்குணம் படைத்த பெண்ணை மனையாளாகக்
கொண்டவன் என்றும் துன்புறுவான்.
 
  ‘‘எறிஎன்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; -அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
 

அடி என்று சொல்லிக்கொண்டு கணவனை எதிர்த்து நிற்பவள் எமன்;
விடியற்காலத்திலேயே சமையல் கட்டையடைந்து உணவுப் பொருள்களைச்
சமைக்காதவள் ஒரு பெரிய நோய்; சமைத்த உணவைப் பசி நேரத்தில்
பரிமாறாதவள் வீட்டில் வாழும் பேய்; இக்குணமுள்ள பெண்கள் தம்மைக்
கொண்ட கணவனைக் கொல்லும் ஆயுதம் ஆவர்’’.

கணவன் சொல்லுக்குக் கீழ்ப்படிவது; காலதாமதம் இன்றிச் சமையல்
செய்வது; சமைத்ததை அன்புடன் பரிமாறுவது; இவை மனைவியின் சிறந்த
கடமை என்று வற்புறுத்துகிறது இச்செய்யுள். கணவனுக்குப் பணிவிடை
செய்யவேண்டியதே மனைவியின் கடமை என்பது பழந்தமிழ் நாட்டுப் பண்பு.

வீட்டிலிருந்துகொண்டு இல்லறத்தை நன்றாக நடத்த வேண்டுவதுதான
பெண்கள் கடமை. ஆயினும் அவர்களும் கல்வி கற்றிருக்கவேண்டும்.
ஆண்களைப் போலவே கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
இக்கொள்கையை நாலடியார் ஒப்புக்கொள்ளுகிறது.
 

  ‘‘குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்,
மஞ்சள் அழகும் அழகல்ல;-நெஞ்சத்து
நல்லம் யாம், என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு
 

தலைமயிரின் அழகும், வளைந்து கொடுக்கும் துணியின் கரையழகும்,
மஞ்சள் பூசிக்கொள்ளுவதனால் உண்டாகும்