‘‘உனக்கும் தலைவிக்கும் உள்ள கள்ள நட்பு வெளிப்பட்டால் ஊரார்
பழிப்பர்.
ஆதலால் விரைவில்
தலைவியைப் பலரும் அறிய
மணம்புரிந்துகொள்’’ என்ற கருத்தையே
தோழி இவ்விதம் தலைவனிடம்
உரைத்தாள்.
கற்புள்ள பெண்ணுக்குக்
கணவனே தெய்வம்; அவனை விட்டால்
அவளுக்கு வேறு
கதியில்லை; இதுவே பழந்தமிழர் கொள்கை.
இக்கொள்கையை
வற்புறுத்துகிறது இந்நூல்.
மனைவி ஊடியிருக்கின்றாள். அவள் ஊடலைத் தணிக்கும்படி, காதலன்
தோழியிடம்
வேண்டிக்கொள்ளுகின்றான்.
அப்பொழுது அவனுக்குத் தோழி
விடையளிக்கின்றாள்.அவ்விடையிலே இக்கருத்து அடங்கி
யிருக்கின்றது.
‘‘செந்தாமரைகள் பூத்திருக்கின்ற வயல்களையுடைய மருதநிலத்
தலைவனே! நாங்கள்
உன்மேல்
வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்?
என்னுடைய தலைவிக்கு நல்ல அழகைத்
தந்தவனும் நீதான்! அந்த
அழகைத்
திருப்பி எடுத்துக்கொண்டவனும் நீயேதான்! ஆதலால்
எங்களால் ஆவது ஒன்றும் இல்லை; உன்
விருப்பத்தின்படியே செய்.
|