தெய்வ வணக்கம்
‘‘தேவர்கள் வானுலகிலே வாழ்கின்றவர்கள். அவர்கள் எல்லா
வல்லமையும்
படைத்தவர்கள்; அவர்களை வணங்கி வழிபாடு செய்தால் நாம்
விரும்புவதைப் பெறலாம்’’
இந்த நம்பிக்கை
தமிழர்களிடம்
குடிகொண்டிருந்தது.
தேவர்களைப் பல வகையிலே மக்கள் வணங்கி வந்தனர். அவைகளில்
நறுமணப்
புகையிட்டு வணங்கும் வழக்கம் ஒன்று. இதைத்தான் தூபமிட்டு
வணங்குதல் என்று கூறுவர்.
இன்றும் சாம்பிராணி, தசாங்கம்,
குங்கிலியம்,
ஊதுவத்தி முதலிய தூபங்களால்
தெய்வங்களை வணங்குவதைக்காண்கிறோம்.
இது பழந்தமிழர்
பண்பாடுதான்.
|