பக்கம் எண் :

164சாமி சிதம்பரனார்

இக
இக்கொள்கையை நாலடியார் பாட்டு ஒன்று மறுத்துரைக்கின்றது.
‘‘அவரவர்கள் தன்மைக் கேற்றபடியே நன்மை தீமை பெறுவார்கள்; அவர்கள்
பெறும் நன்மை தீமைகளுக்கு அவர்கள் வாழும் நாடு காரணம் அன்று’’
என்று கூறுகின்றது அச்செய்யுள்.
 
  ‘‘எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரம்காழ் தெங்கு ஆகா
தென்னாட்டவரும் சுவர்க்கம் புகலால்;
தன்ஆற்றான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன் ஆளர் சாலப் பலர்
 

எந்த நிலத்திலே விதையைக்கொண்டு போய்ப் போட்டாலும் காஞ்சிரம்
விதை தென்னை மரமாக முளைத்துவிடாது. தென்னாட்டில் உள்ளவர்களும்,
நற்கருமங்களைச் செய்கின்றனர்; சுவர்க்கம் அடைகின்றனர். வடநாட்டிலும்
வீண்பொழுது போக்குவோர் பலர் உண்டு. அவர்கள் நற்கதி பெறுவதில்லை;
நரகத்தையே அடைகின்றனர். ஆதலால் ஒருவன் மறுமையிலே பெறும்
நன்மைக்கு நாடு காரணம் அன்று; தன் ஒழுக்கமே - நடத்தையே
காரணமாகும்’’.

(பா.243)

இச்செய்யுள் வடநாடு புண்ணிய பூமி; தென்னாடு பாவபூமி என்னும்
கொள்கை தவறு என்பதை எடுத்துக் காட்டிற்று.

திருக்குறள் கருத்துக்கள்

நாலடியார் பாடல்களிலே பல, திருக்குறளின் கருத்துக்களை விளக்கிக்
கூறுகின்றன. திருக்குறளை நன்றாகக் கற்ற ஆசிரியர்களால் பாடப்பட்ட
பாடல்களே நாலடிப் பாடல்கள் என்று எண்ணலாம்.